என்னை விட்டு கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர்
என்னை விட்டு கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே
1)
நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது என்னை தூக்கி நடந்தீர்
2) நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போது உம் கிருபையால் மன்னித்தீர்
3) நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்
4)
நான் வேண்டுவதை எல்லாம் என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய் என்னைஆசீர்வதிக்கின்றீர்
No comments:
Post a Comment