Saturday, September 1, 2018

ஆத்துமாவே நன்றி சொல்லு



ஆத்துமாவே நன்றி சொல்லு

     ஆத்துமாவே நன்றி சொல்லு
     முழு உள்ளத்தோடே- என் - 2
    
கர்த்தர் செய்த நன்மைகளை
    
ஒருநாளும் மறவாதே - 2

 1.  குற்றங்களை மன்னித்தாரே
   
நோய்களை நீக்கினாரே - 2
   
படுகுழியினின்று மீட்டாரே
   
ஜீவனை மீட்டாரே - 2              -கர்த்தர்

 2.  கிருபை இரக்கங்களால்
    
மணிமுடி சூட்டுகின்றார் - 2
    
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    
திருப்தி ஆக்குகின்றார்   - 2         -கர்த்தர்

 3.  இளமை கழுகு போல
    
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் - 2
    
ஓடினாலும் நடந்தாலும்
    
பெலன் குறைவதில்லை - 2 - நாம்     -கர்த்தர்

No comments:

Post a Comment