புது கிருபைகள் தினம் தினம் தந்து
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே -2
என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான
மேன்மை வேறொன்றும் இல்லையே -2
1) நேர்
வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர் -2
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திடீர் -2 என் இயேசுவே
2) பாதங்கள்
சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர் -2
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர் -2 என் இயேசுவே
No comments:
Post a Comment